வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை September 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு 20 கிராம் மிளகு 20 கிராம் திப்பிலி 20 கிராம் கடுக்காய் 1 மஞ்சள் பொடி சிறிதளவு ஏலக்காய் 2 எண்ணிக்கை சித்தரத்தை 20 கிராம் அதிமதுரம் 20 கிராம் கிராம்பு 20 கிராம் ஓமம் 20 கிராம் தண்ணீர் 300 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் தவிர மீதமுள்ள பொருட்களை சிறிது வறுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்துக்கொண்டு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீர் 100 மி.லி வரும்வரை கொதிக்க விடவும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.இதனை தொடர்ந்து மூன்று வேளைகள் குடித்து வந்தால் வைரஸ் நோய் முற்றிலுமாக குணமாகும். சித்தரத்தை பொடி மஞ்சள் பொடி ஓமம் கிராம்பு ஏலக்காய் Related posts:வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத வேப்பம்பட்டை தேநீர்காய்ச்சல் சரியாககுழந்தையின் தலை சூட்டை குறைக்கும் மாதுளையின் மருத்துவம்பெண்கள் உடல் எடையை குறைக்க உதவும் அருமையான வீட்டு வைத்தியம்