உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை July 27, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு 100 கிராம் அதிமதுரம் 100 கிராம் சித்தரத்தை 30 கிராம் கடுக்காய் பொடி 30 கிராம் மஞ்சள் 10 கிராம் திப்பிலி 5 கிராம் ஓமம் 5 கிராம் கிராம்பு 5 கிராம் மிளகு 5 கிராம் கற்பூரவள்ளி இலை 5 எண்ணிக்கை புதினா இலை 10 எண்ணிக்கை எலுமிச்சை சிறிய துண்டு இஞ்சி சிறிய துண்டு தண்ணீர் 400 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே நன்கு வறுத்துக்கொள்ளவும்.வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீரில் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க விடவும்.மேலும் கொதிக்கும் நீருடன் கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களையும் சேர்த்து கொதிக்க விடவும்.மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீருடன் சிறிதளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது அருமையான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.குழந்தைகளுக்கு 50 மி.லி மற்றும் பெரியவர்களுக்கு 100 மி.லி குடிக்கலாம். சுக்கு மிளகு திப்பிலி இஞ்சி தண்ணீர் கற்பூரவள்ளி இலை புதினா இலை அதிமதுரம் பொடி சித்தரத்தை பொடி கடுக்காய் பொடி மஞ்சள் பொடி ஓமம் கிராம்பு Related posts:சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்கண் பார்வையை சரி செய்ய